×

தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர் ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார்: ப.சிதம்பரம் சாடல்

சென்னை: தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர் ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகம் 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இருப்பதற்கு ஆளுநர் ரவியே காரணம். 1857ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் 3 பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ரவி மோதல் போக்கை கடைபிடிப்பதே காரணம் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர் ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார்: ப.சிதம்பரம் சாடல் appeared first on Dinakaran.

Tags : Governor Ravi ,Tamil Nadu ,Chidambaram Saddle ,Chennai ,Chidambaram ,University of Chennai ,India ,Governor Raviye ,p. ,Chidambaram Saddal ,
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...