×

தஞ்சாவூர் அருகே காருக்குள் சடலமாக கிடந்த பட்டதாரி வாலிபர்

*போலீஸ் விசாரணை

திருவையாறு : தஞ்சாவூர் அருகே பட்டதாரி வாலிபர் காருக்குள் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த பள்ளி அக்ரஹாரம் பணவெளி சாலையில் வெண்ணாறு வடகரையில் சாமுவேல் படுகையில் காரின் உள்ளே 25வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக நடுக்காவேரி போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன் பேரில் திருவையாறு டிஎஸ்பி ராமதாஸ், இன்ஸ்பெக்டர் சத்தியபாமா, சப்-இன்ஸ்பெக்டர்கள் மதியழகன், விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்து கிடந்தவர் திருச்சி தில்லைநகர் 5வது தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சபரீசன்(31) என்பதும், பொருளாதார பட்டதாரியான இவர், தில்லைநகரில் பிளக்ஸ் போர்டு பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்தி வந்ததும், இவருக்கு பிரீத்தி (25) என்ற மனைவி இருப்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் கார் கண்ணாடியை உடைத்து சபரீசன் உடலை வெளியே கொண்டு வந்தனர்.

காருக்குள்ளே குளிர்பானம், பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது. பின்னர் போலீசார் சபரீசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தஞ்சாவூர் அருகே காருக்குள் சடலமாக கிடந்த பட்டதாரி வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thiruvaiyaru ,Samuel Basin ,Vennaru North Bank ,Agraharam Panaveli road ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் 4,021...