- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- சென்னை
- மத்திய தொழிற்சங்கங்கள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தோமு
- ஏஐடியுசி
- சிஐடியு
- HMS
- INDUC
- ஏஐடியு
- ஏ.ஐ.சி.சி.டி.யு
- WUPTUC
- எம்எல்எஃப்
- எல்.எல்.எஃப்
- எஸ்.டி.யு.சி
- யூனியன் அரசு
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில், தொமுச, ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, ஏஐயூடியூ, ஏஐசிசிடியு, டபுள்யுபிடியுசி, எம்எல்எப், எல்எல்எப், எஸ்டியுசி ஆகிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஒன்றிய அரசின் மக்கள் விரோத ஜனநாயக விரோத, விவசாயிகள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக பிப்.16ம் தேதி வேலை நிறுத்தம், கிராமங்களில் முழு அடைப்பு, மறியல் உள்ளிட்ட வடிவங்களில் போராட்டம் நடத்த வேண்டும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் ஐக்கிய முன்னணியின் கூட்டு கூட்டம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் பிப்.1க்கு முன் துறை வாரியாகவும் தொழிற்சாலை அளவிலும் வேலைநிறுத்த முன்னறிவிப்பு நோட்டீஸ் தர வேண்டும். பிப்.16ம் தேதி வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற ஏற்பாடுகளையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். விவசாயிகள் சங்கங்களின் கிராமப்புற் போராட்டம் வெற்றிபெற தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கோரிக்கைகளை விளக்கி விரிவான பரப்புரை இயக்கம் மேற்கொள்ள வேண்டும். தெருமுனை கூட்டங்கள், ஆலைவாயில் கூட்டங்கள், தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை விநியோகித்தல் உள்ளிட்ட வடிவங்களில் இந்த இயக்கத்தை நடத்த வேண்டும். இளைஞர், மாணவர், பெண்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய துறையினர், சிறுகுறு தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள், கோரிக்கையை ஆதரித்து போராட உடன் வரும் மக்கள் அமைப்புகளிடமும் ஆதரவு கோரி, மறியல் போராட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
The post ஒன்றிய பாஜ அரசை கண்டித்து பிப்.16ம் தேதி தொழிற்சாலைகள் துறை சார்ந்த வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.