×

பத்மபூஷன் காலம் கடந்து கொடுக்கப்பட்ட விருது விஜயகாந்த் இருந்தபோதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக பெற்றிருப்போம்: பிரேமலதா பேட்டி

சென்னை: பத்மபூஷன் காலம் கடந்து கொடுக்கப்பட்ட விருது. விஜயகாந்த் இருந்த போதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக பெற்றிருப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று அளித்த பேட்டி: விஜயகாந்த் உயிருடன் இருந்த காலத்திலேயே விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். விஜயகாந்த் இருந்தபோதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக பெற்றிருப்போம். விஜயகாந்த் மறைந்து 30 நாட்களுக்கு பிறகு இந்த சிறப்பை ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. விஜயகாந்த் மீது அன்பு வைத்திருந்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதை சமர்ப்பிக்கிறோம். பவதாரிணி மறைந்தது மிகப்பெரிய இழப்பு. பவதாரிணியை சின்ன குழந்தையாக இருந்த போதிருந்து பார்த்திருக்கிறேன். பவதாரிணியின் இனிய குரலை இனி கேட்க முடியாது என்பதே வேதனை தான். இவ்வாறு அவர் கூறினார்.

The post பத்மபூஷன் காலம் கடந்து கொடுக்கப்பட்ட விருது விஜயகாந்த் இருந்தபோதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக பெற்றிருப்போம்: பிரேமலதா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Padma ,Vijayakanth ,Premalatha ,Chennai ,General Secretary ,DMD ,Coimbatore, Chennai ,
× RELATED நடிகரும் தேமுதிக தலைவருமான...