×

ஐபிஎல் ஆட காத்திருக்கிறோம்: தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர்

சென்னை: தமிழ் நாடு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ரவிசீனிவாசன் சாய் கிஷோர்(27) தன் அற்புத ஆட்டம் காரணமாக இந்திய அணியின் கவனத்தை ஈர்த்தார். அதனால் ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் ேபாட்டியில் அறிமுகமாகி இந்திய அணி தங்கம் வெல்ல உதவினார். இப்போது ரஞ்சி கோப்பைத் தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாகவும் அசத்தி வருகிறார். ஐபிஎல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளரான சாய் கிஷோர் நமது நிருபரிடம் பேசும் போது, ‘ரஞ்சி தொடரில் தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் பயிற்சி, அனுபவமும் வர இருக்கின்ற ஐபிஎல் போட்டிக்கு உதவியாக இருக்கும். ஐபிஎல் தொடரின் கவனம் ஈர்க்கும் தமிழ்நாடு வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப ஐபிஎல் ெதாடரில் தமிழக வீரர்கள் சிறப்பான பங்களிப்ைப அளித்து வருகின்றனர். அதற்கு சையத் முஷ்டாக் அலி உள்ளிட்ட டி20 தொடர்கள் மட்டுமல்ல, உள்ளூர் தொடரான டிஎன்பிஎல் தொடரும் முக்கிய காரணம். இனியும் டிஎன்பிஎல் தொடர் மூலம் பல தமிழ்நாடு வீரர்கள் இந்தியாவின் மட்டுமல்ல, சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். இப்போது நாங்கள் ஐபிஎல் தொடருக்காகவும் தயாராகி வருகிறோம்.’என்றார்.

The post ஐபிஎல் ஆட காத்திருக்கிறோம்: தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் appeared first on Dinakaran.

Tags : IPL ,Tamil Nadu ,Sai Kishore ,CHENNAI ,Ravishinivasan Sai Kishore ,team ,Asian Games T20 ,Dinakaran ,
× RELATED கள்ளச்சந்தையில் IPL டிக்கெட் வழக்கு:...