×

சத்தியமங்கலம் அருகே சாலையோரம் நடமாடிய 2 சிறுத்தை குட்டிகள்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே சாலையோரம் நடமாடிய 2 சிறுத்தை குட்டிகளால் பொதுமக்கள், விவசாயிகள் பீதி அடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விவசாய தோட்டத்துக்குள் சிறுத்தை நடமாடியதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாடிய தோட்டத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலம் அடுத்துள்ள உக்கரம் அருகே கேத்தம்பாளையம் கிராமத்தில் இருந்து காக்காராகுட்டை செல்லும் சாலை ஓரத்தில் 2 சிறுத்தை குட்டிகள் நடமாடுவதை அவ்வழியாக காரில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சிறுத்தை குட்டிகள் நடமாட்டத்தை செல்போனில் புகைப்படம் எடுத்தனர். சிறிது நேரம் சாலையோரம் நடமாடிய சிறுத்தை குட்டிகள் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தை குட்டிகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். கிராமப் பகுதிக்குள் விவசாய தோட்டத்தில் 2 சிறுத்தை குட்டிகள் நடமாடுவதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

The post சத்தியமங்கலம் அருகே சாலையோரம் நடமாடிய 2 சிறுத்தை குட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Satyamangalam ,Sathyamangalam ,ARIYAPAMPALAYAM ,ERODE DISTRICT ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு