×

குளத்தூர் அருகே பூசனூரில் தற்கொலை செய்த பெண் உடல் 3 நாட்களுக்கு பிறகு ஒப்படைப்பு

 

குளத்தூர், ஜன. 26: குளத்தூர் அருகே பூசனூரில் தற்கொலை செய்து கொண்ட பெண் உடல், போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து 3 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குளத்தூர் அருகே உள்ள பூசனூர் தெற்குத்தெருவை சேர்ந்த கணேசன் மகன் முனியசாமி(30). இவரது மனைவி முத்துச்செல்வி (26). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளது. தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதே ஊரை சேர்ந்த சிலர் அவதூறாக பேசியதால் மனமுடைந்த முத்துச்செல்வி, கடந்த 23ம் தேதி மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கில் தொங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு குளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், முத்துச்செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குளத்தூர் போலீசார், முத்துச்செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனிடையே முத்துச்செல்வி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 3வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்த நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆர்டிஓ கவனத்திற்கு கொண்டு சென்று அவரது விசாரணையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையேற்று முத்துச்செல்வி உடலை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

The post குளத்தூர் அருகே பூசனூரில் தற்கொலை செய்த பெண் உடல் 3 நாட்களுக்கு பிறகு ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Pusanur ,Kulathur ,Ganesan ,Muniyaswamy ,Bhusanur South Road ,
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா