×

மார்த்தாண்டம், நேசமணிநகர் இன்ஸ்பெக்டர்கள் நியமனத்தில் மாற்றம்: டிஐஜி உத்தரவு

 

நாகர்கோவில், ஜன.26: திருநெல்வேலி காவல் சரகத்தில் இன்ஸ்பெக்டர்கள் அண்மையில் மாற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில் மாறுதல் உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் இளவரசு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மார்த்தாண்டம் காவல்நிலையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மார்த்தாண்டம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேசமணிநகர் காவல்நிலையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் இருந்த அந்தோணியம்மாள் நேசமணிநகர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை நெல்லை சரக டிஐஜி பிறப்பித்துள்ளார்.

The post மார்த்தாண்டம், நேசமணிநகர் இன்ஸ்பெக்டர்கள் நியமனத்தில் மாற்றம்: டிஐஜி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Neshamaninagar Inspectors ,Nagercoil ,Tirunelveli ,Inspector ,Prince ,Kadayanallur ,Branch ,Tenkasi District ,Marthandam Police Station ,Nagercoil… ,Neshamaninagar ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...