×

எம்எல்ஏ மகன், மருமகள் கைது

 

சென்னை, ஜன.26: தலைமறைவாக இருந்த எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகளை தனிப்படை போலீசார் ஆந்திரா அருகே நேற்று கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகள் ரேகா (18). சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதியின் வீட்டில் வேலை செய்துவந்தார்.

இந்தநிலையில், மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதியினர் ரேகாவை கட்டாயப்படுத்தி வேலை வாங்கியும் அடித்து துன்புறுத்தி முகம், கை, கால் பகுதிகளில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக ரேகா அனுமதிக்கப்பட்டார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து மருத்துவமனை மூலம் கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ரேகாவிடம் விசாரணை நடத்தினர்.

பாதிக்கப்பட்ட பெண் ரேகா டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகிய இருவர் மீதும் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்று இருவரையும் தனிப்படை போலீசார் ஆந்திரா அருகே கைது செய்துள்ளனர்.

The post எம்எல்ஏ மகன், மருமகள் கைது appeared first on Dinakaran.

Tags : MLA ,Chennai ,Andhra ,Veeramani ,Tirukkalukkunram ,Ulundurpet, Kallakurichi district ,Rekha ,Thiruvanmiyur ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...