- தோப்பூர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- தோபூர்
- தமிழ்
- தமிழ்நாடு
- மு.கே ஸ்டாலின்
- தர்மபுரி மாவட்டம்
- நல்லம்பள்ளி
- பாளையம்
- தர்மபுரி
- தின மலர்
சென்னை: தொப்பூர் கணவாய் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, பாளையம் உள்வட்டம், தர்மபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் கடந்த 24ம் தேதி 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (56), விமல் (28), அனுஷ்கா (23), ஜெனிபர் (29) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ரூ.50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தொப்பூர் கணவாயில் கோர விபத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.