×

கொடநாடு கொலை வழக்கு சயானுக்கு சிபிசிஐடி சம்மன்

கோவை: நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ், ஜிதின், திபு, ஜம்சீர் உட்பட 11 பேரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் இறந்தார். சசிகலா உட்பட 300க்கும் மேற்பட்டவர்களின் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான் கடந்த 11ம் தேதி விசாரனைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சயான் மீது கேரள கோர்ட்டில் வழக்கு இருப்பதால் அவர் அன்றைய தினம் ஆஜராகவில்லை. இந்நிலையில், வரும் பிப்ரவரி 1ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இவரை தொடர்ந்து மேலும் சிலரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post கொடநாடு கொலை வழக்கு சயானுக்கு சிபிசிஐடி சம்மன் appeared first on Dinakaran.

Tags : CBCID ,Sayan ,KOWAI ,BUNGALA ,JAYALALITHA ,KODANAD, NEILGIRI DISTRICT ,Jayalalithaa ,Kanakaraj ,Saiyan ,Valaiyar Manoj ,Jidin ,Dibu ,Jamseer ,CBCID Summon ,Kodanadu ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...