×

பாலியல் வழக்கில் 3 ஆண்டு சிறை மாஜி டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு வரும் 29ம் தேதி கடைசி வாய்ப்பு: கண்டிப்பாக ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம்: பாலியல் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வரும் 29ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டுமென விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறைண்டனை, ₹20,500 அபராதமும், புகார் கொடுக்க சென்ற பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தியதற்கான குற்றச்சாட்டில் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனுக்கு ₹500 அபராதம் விதித்து விழுப்புநீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து இருவரும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே முன்னாள் சிறப்பு டிஜிபி, இந்த வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், மார்ச் மாதத்திற்குள் மேல்முறையீட்டு வழக்கை முடித்திட உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். தொடர்ந்து நீதிபதி, மேல்முறையீட்டு வழக்கில் வாதாடுவதற்கு பலமுறை வாய்ப்பு அளித்தும் முன்வராத நிலையில் இறுதிவாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், வரும் 29ம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கண்டிப்பாக நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டுமென கூறிய நீதிபதி, அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post பாலியல் வழக்கில் 3 ஆண்டு சிறை மாஜி டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு வரும் 29ம் தேதி கடைசி வாய்ப்பு: கண்டிப்பாக ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGP ,Rajeshthas ,Villupuram ,Villupuram Court ,Rajeshtas ,Edappadi Palaniswami ,Chief Minister of ,Tamil Nadu ,AIADMK ,Delta ,
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...