×

திருவண்ணாமலை சென்ற சென்னை பக்தர் திடீர் மரணம்

சென்னை: திருவண்ணாமலை கோயிலுக்கு சென்ற சென்னை பக்தர் வீடு திரும்ப பஸ் நிலையத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். சென்னை கொளத்தூர் வெற்றி நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (50), தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று சென்னையில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்றார். தரிசனம் முடித்து விட்டு, நேற்று மாலை சென்னை செல்ல திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அப்போது, அங்குள்ள ஒரு டீக்கடை முன்பு அமர்ந்திருந்த மணி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனாலும், சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். மாரடைப்பில் அவர் இறந்தது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார், மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் விசாரிக்கின்றனர்.

The post திருவண்ணாமலை சென்ற சென்னை பக்தர் திடீர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tiruvannamalai ,Thiruvannamalai temple ,Mani ,Kolathur Vetri Nagar, Chennai ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...