- முத்து
- மாரியம்மன்
- கோவில்
- Kumbabhishekam
- Balakode
- முத்து மரியம்மன் கோயில்
- கும்பாபிஷேகம்
- மெக்கலாம்பட்டி பாமாண்டி
- பாலகோடு
- கணபதி
- பட்டாச்சார்யா
- யகசாலா
- கோயில்
பாலக்கோடு: பாலக்கோடு அருகே மேக்கலாம்பட்டி பாமாண்டி நகரில் முத்துமாரியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 22ம் தேதி கொடியேற்றி, கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை யாகசாலையிலிருந்து புனிதநீர் கலச தீர்த்தத்தை பட்டாச்சார்யர்கள், ஊர் கவுண்டர்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து, முத்துமாரியம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
The post முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.