×

கஞ்சா விற்ற 2 பேர் கைது

மாதவரம்: ஓட்டேரி பிரிக்கிளின் ரோடு பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தலைமைச் செயலக காலனி இன்ஸ்பெக்டர் சுதாகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் அப்பகுதியில் சந்தேக நபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், அவர் கார்த்திக் என்ற ஆண்ட்ரோ (25) என்பது தெரியவந்தது. இவர் ஆவடி அண்ணாமலை நகர் 2வது தெருவைச் சேர்ந்த கோகுல்ராஜ் (23) என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும் விற்பனை செய்த பணம் சுமார் ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பிறகு கார்த்திக் மற்றும் கோகுல்ராஜ் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chief Secretariat Colony Inspector ,Sudhakar ,Otteri Brick Road ,
× RELATED ரூ.4.8 கோடி பறிமுதல்: பாஜக வேட்பாளர் மீது வழக்கு