×

வயதான நபர்களை குறிவைத்து பாலியல் தொழில்; புரோக்கர் கைது

சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் வயதான நபர்களை குறிவைத்து பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு தகவல் வந்தது. அதன்படி விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான மகளிர் போலீசார், கோடம்பாக்கம் தார் அஸ்லாம் அசோக் அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் அருகே நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு வயதான நபர்கள் அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. உடனே விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக குடியிருப்பில் உள்ள வீட்டிற்குள் சோதனை நடத்தினர். அப்போது, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையை சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கர் அர்ஜூன் குமார் (29) என்பவர், வயதான நபர்களிடம் இளம்பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் பாலியல் புரோக்கர் அர்ஜூன் குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

The post வயதான நபர்களை குறிவைத்து பாலியல் தொழில்; புரோக்கர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Assistant Commissioner ,Rajalakshmi ,Anti-Prostitution Division ,Kodambakkam ,Inspector ,Selvarani ,Dar Aslam Ashok ,Dinakaran ,
× RELATED அனைத்து நிறுவனங்களும்...