- புதுஅங்கன்வாடி
- மையம்
- கருங்குழி பேரூராட்சி
- மதுராந்தகம்
- செல்வம்
- அங்கன்வாடி மையம்
- செங்கல்பட்டு மாவட்டம்
- கருங்குழி பேரூராட்சி 2வது வார்டு ஆதிவாசி நகர்
- அங்கன்வாடி
- கருங்குச்சி நகராட்சி
- தின மலர்
மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில் ரூ.15 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணிக்கு எம்பி செல்வம் அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சி 2வது வார்டு ஆதிவாசி நகர் பகுதியில், அங்கன்வாடி மையம் தனியார் கட்டிடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் எம்பி செல்வத்தை சந்தித்து அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டித் தருமாறு கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதன்பேரில், அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சங்கீதா சங்கர், பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் அனைவரையும் வரவேற்றார். இதில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் கலந்துகொண்டு, அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இதில், மன்ற உறுப்பினர்கள் உமா, தினேஷ், ரமேஷ், மேகலா உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள், அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
The post கருங்குழி பேரூராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்: எம்பி அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.