×

நீலாங்கரை கடற்கரையில் துள்ளிக் குதித்து கொஞ்சி விளையாடிய டால்பின்கள் மீனவர்கள் வியப்பு

துரைப்பாக்கம்: நீலாங்கரை கடற்கரையில் கூட்டம் கூட்டமாக துள்ளி குதித்து கொஞ்சி விளையாடிய டால்பின்களை மீனவர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். சென்னை நீலாங்கரை மீனவர்கள் நேற்று காலை கடலில் மீன் பிடிப்பதற்காக படகில் சென்று விட்டு கரைக்கு திரும்பினர். அப்போது கரையோரம் 20க்கும் மேற்பட்ட டால்பின்கள் அழகாக வரிசைகட்டி துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டிருந்தன. இதை பார்த்த மீனவர்கள் படகை அந்த வழியில் செலுத்தாமல் டால்பின்களுக்கு வழிவிட்டு, அவைகள் துள்ளி குதித்து கொஞ்சி விளையாடியதை பார்த்து ரசித்துச் சென்றனர். வழக்கமாக, ஆழ்கடலில் காட்சியளிக்கும் டால்பின் கூட்டம் நேற்று எதிர்பாராத விதமாக கரை அருகே கூட்டமாக வந்ததை பார்த்த மீனவர்கள் தங்களது செல்போனில் படம், வீடியோவாக பதிவு செய்தனர். கண்கவரும் வகையில் அழகாக ஒன்றன் பின் ஒன்றாக ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக டால்பின்கள் இரை தேடிச் சென்றன. கரை பகுதியில் டால்பின்களை பார்த்தது இதுவே முதல்முறை என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

The post நீலாங்கரை கடற்கரையில் துள்ளிக் குதித்து கொஞ்சி விளையாடிய டால்பின்கள் மீனவர்கள் வியப்பு appeared first on Dinakaran.

Tags : Neelangara ,Durai Pakkam ,Neelangarai beach ,Chennai ,Neelangarai ,
× RELATED பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம்...