×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுபான கடைகள் மூட வேண்டும்: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதியின்படி, அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் கீழ்கண்ட நாட்களில் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்ற அரசின் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று வள்ளலார் நினைவு தினம் (25ம் தேதி), நாளை குடியரசு தினம் (26ம் தேதி) ஆகிய 2 நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு மற்றும் அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (பார்) உள்ளிட்டவற்றை இரண்டு நாட்களுக்கு முழுவதுமாக மூடப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுபான கடைகள் மூட வேண்டும்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram district ,Kanchipuram ,Collector ,Kalaichelvi Mohan ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...