சென்னை: எனது நாவலை வைத்து கேப்டன் மில்லர் படம் எடுக்கப்பட்டுள்ளது என எழுத்தாளர் வேல ராமமூர்த்தி புகார் தெரிவித்துள்ளார். “பட்டத்து யானை” நாவலை ஒப்படைத்து தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில் வேல ராமமூர்த்தி புகார் அளித்தார். நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு வெளி வந்தது. கதை தன்னுடையது என ஏற்கனவே கூறியிருந்த வேல ராமமூர்த்தி தற்போது புகார் அளித்துள்ளார்.
The post எனது நாவலை வைத்து கேப்டன் மில்லர் படம் எடுக்கப்பட்டுள்ளது: எழுத்தாளர் வேல ராமமூர்த்தி புகார் appeared first on Dinakaran.