×

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா தொடங்கியது

கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா தொடங்கியது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படுகின்ற வள்ளலார் கடலூர் மாவட்டம் வடலூரில் உலகப் புகழ்பெற்ற சத்திய ஞான சபை நிறுவினார்.

அங்கு வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு 153வது ஜோதி தரிசன விழாவையொட்டி சத்திய ஞான சபையில் சன்மார்க்கக் கொடி கொடியேற்ற பட்டது.இதில் பல்லாயிரம் கணக்கான சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Taipusa Jyoti Darshan Grand Festival ,Vadalur ,Sathya Gnana Sabha ,Cuddalore ,Thaipusa Jyoti Darshan festival ,Sathya Gnana ,Sabha ,Vallalar ,Ramalinga Adikalar ,Satya Gnana Sabha ,Vadalur, Cuddalore district.… ,Vadalur Sathya Gnana Sabha ,
× RELATED வள்ளலார் சர்வதேச அமைக்கும் பணி...