×

விருதுநகர் ஆர்ஆர் நகரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : விருதுநகர் ஆர்ஆர் நகரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் சேதம் அடைந்துள்ளன.

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகரில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 அறைகள் சேதமடைந்தன. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி, அங்கு பணியாற்றி வந்த காளிராஜ், வீராக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே, விபத்தில் பலியானவர்களின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விருதுநகர் ஆர்ஆர் நகரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Virudhunagar RR ,Virudhunagar ,Virudhunagar District ,R. R. ,Murukesan ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...