×

குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கோபுராஜபுரம் ஊராட்சியில் மாலாபுரம் கிராமத்தில் மேலத்தெருவில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை மீட்ட வலியுறுத்தி கிராம மக்கள் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பாபநாசம் வட்டாட்சியரை சந்தித்து குடும்ப அட்டையுடன் கோரிக்கை மனுவை வழங்கினர். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்ததன் பேரில் பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

The post குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Thanjavur District ,Papanasam Union ,Gopurajapuram ,Panchayat ,Malappuram Village ,Papanasam District Collector ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!