×

பொன்னமராவதியில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பிரசாரம்

பொன்னமராவதி: பொன்னமராவதியில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து சமூகஆர்வலர் சரவணன் பதாகைகள் ஏந்தியும், முழக்கமிட்டும் பிரசாரம் மேற்கொண்டார். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வலைச்சேரிப்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணனன். இவர் புத்தாண்டு கொண்டாட்டம், மது ஒழிப்பு , சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ,காதலர் தின எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செய்து வருகிறார். அதன்படி வரும் 25ம் தேதி வாக்காளர் விழிப்புணர்வு நாளையொட்டி பொன்னமராவதி பேருந்துநிலையம் மற்றும் அண்ணாசாலையில் நேற்று வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார். இதில் வாக்களிப்பது ஜனநாயக கடமை, ஜனநாயகத்தை உயர்த்த வேண்டும். பணநாயகத்தை வீழ்த்தவேண்டும். பணம், பொருள் வாங்காமல் வாக்களிக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம், வாக்களிக்க பண், பொருள் வாங்குவதும் கொடுப்பதும் சட்ட விரோத செயல் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி பிரசாரம் மேற்கொண்டார்.

The post பொன்னமராவதியில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Saravanan ,Saravananan ,Velabcheripatti ,Kottampatti ,Madurai ,New Year ,Ponnamaravathi ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...