×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தர்மபுரி, ஜன.24: தர்மபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் நான்கு ரோடு பகுதியில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தர்மபுரி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், போக்குவரத்து தலைமை காவலர் ரகுநாதன் மற்றும் நேரு யுவகேந்திரா திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். பிரசாரத்தில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், எமதர்மன் வேடமணிந்து பொதுமக்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை விளக்கினர். நிகழ்ச்சியில், கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,District ,Nehru Yuvakendra ,District Traffic Police ,Dharmapuri District ,Inspector ,Dharaneethar ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...