×

பைக்கில் சென்று கொண்டிருந்த எலக்ட்ரீசியன் திடீர் சாவு

மேட்டுப்பாளையம், ஜன.24: மேட்டுப்பாளையம் சாந்தி நகர் பகுதியைச்சேர்ந்தவர் சுரேஷ் குமார் (45). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சரண்யா (38) என்ற மனைவியும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நேற்று காலை தனது பைக்கில் சுரேஷ்குமாரும், மனைவி சரண்யாவும் தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். தனியார் மருந்தகம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சுரேஷ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பைக்கில் இருந்து கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்தனர். சுரேஷ்குமார் அங்கு மூச்சு பேச்சின்றி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பைக்கில் சென்று கொண்டிருந்த எலக்ட்ரீசியன் திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Suresh Kumar ,Shanti Nagar ,Saranya ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...