×

வேங்கைவயல் விவகாரம் 31 பேரின் டிஎன்ஏ ஒத்துபோகவில்லை: சிபிசிஐடி தகவல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, தடயவியல் துறை சோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்தநிலையில், ‘ரத்த மாதிரி பரிசோதனை முடிவில் 31 பேரின் ரத்த மாதிரியும் ஒத்து போகவில்லை என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனால் உயர் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post வேங்கைவயல் விவகாரம் 31 பேரின் டிஎன்ஏ ஒத்துபோகவில்லை: சிபிசிஐடி தகவல் appeared first on Dinakaran.

Tags : Vengaivel ,CBCID ,Pudukottai ,Adi Dravidar ,Venkaiwayal ,Pudukottai district ,CBCID police ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் விவகாரம் 3 பேருக்கு குரல் மாதிரி சோதனை