×

சட்டீஸ்கர் முன்னாள் முதல்வருக்கு ஜாமீன்

நொய்டா: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா தொற்றின்போது 144 தடை விதிமுறைகளை மீறியதாக நொய்டா போலீசார் வழக்கு தொடர்ந்தனர். பூபேஷின் தந்தை உயிரிழந்ததில் இருந்து விசாரணக்கு அவர் ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து அவருக்கு எதிராக நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் பிப்ரவரி ஒன்றாம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. மேலும் அகிலேஷ் யாதவ், பூபேஷ் பாகல் உட்பட அரசியல் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளை தவிர கொரோனா பரவலின்போது பதியப்பட்ட இதுபோன்ற அனைத்து வழக்குகளையும் திரு ம்ப பெற உத்தரவிட்டது.

The post சட்டீஸ்கர் முன்னாள் முதல்வருக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Noida ,Chief Minister ,Bhupesh Bagal ,Corona outbreak ,Bhupesh ,Dinakaran ,
× RELATED ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக புபேஷ் பகேல் கருத்து!!