×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 250 தொட்டிகளில் துலிப் மலர் செடிகள் நடவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பூங்காவில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். குறிப்பாக கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல்வேறு வகையான பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக் காணப்படும். மேலும் மே மாதம் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சோதனை முயற்சியாக கடந்த ஆண்டு ஹாலந்து நாட்டை பிறப்பிடமாக கொண்ட துலிப் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கின.

இந்த மலர் செடிகள் காஷ்மீரில் இருந்து கொண்டுவரப்பட்டு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டன. சோதனை முயற்சி வெற்றி அடைந்த நிலையில் நிலையில் தற்போது ஊட்டி தாவரவியல் பூங்காவில் 250 தொட்டிகளில் துலிப் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. வெள்ளை, மஞ்சள், சிவப்பு, ஊதா உள்பட 5 வண்ணங்களில் பூக்கும் இந்த துலிப் மலர் செடிகள் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் 10 நாட்களில் செடிகளில் மலர்கள் பூத்து விடும். மலர்கள் பூத்தவுடன் இந்த மலர் தொட்டிகளை பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் அலங்கரித்து வைக்க பூங்கா நிர்வாக முடிவு செய்துள்ளது. இதற்காக பூங்கா நர்சரியில் தற்போது இந்த மலர் செடிகள் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் 250 தொட்டிகளில் துலிப் மலர் செடிகள் நடவு appeared first on Dinakaran.

Tags : Ooty Botanical Garden ,Ooty ,Nilgiris district ,Ooty Government Botanical Garden ,
× RELATED ஊட்டி மலர் கண்காட்சி துவக்க...