×

திமுக மாணவர் அணி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் 29ம் தேதி கோவையில் நடைபெறும்

சென்னை: தி.மு.க. மாணவர் அணி, மாவட்ட, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் 29ம் தேதி கோவையில் நடைபெறும் என்று மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., அறிவித்துள்ளார்.

தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 29-01-2024 திங்கட்கிழமை, காலை 10.00 மணியளவில், கோவை, பீளமேடு, காளப்பட்டி சாலை “சுகுணா கலையரங்கில்”, எனது தலைமையில், கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., சிறப்புரையாற்றிட, மாநில மாணவர் அணித் தலைவர் இரா.ராஜீவ்காந்தி இணைச் செயலாளர்கள் பூவை ஜெரால்டு, எஸ்.மோகன் மற்றும் துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூரணசங்கீதாசின்னமுத்து, ஜெ. வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

01.02.2024 அன்று, சென்னையில் யுனைடெட் ஸ்டுடென்ட் ஆஃப் இந்தியா (United Students of In- dia) கூட்டமைப்பின் சார்பில் நடைபெற உள்ள மாபெரும் மாணவர் பேரணி, கலைஞர் 100 நூற்றாண்டை முன்னிட்டு மாநில அளவிலான பேச்சு மற்றும் கட்டுரை இறுதிப் போட்டி, மாணவர் அணி ஆக்கப் பணிகள் குறித்து போட்டிகள் நடைப்வென்ற உள்ளது. அதுபோது மாவட்ட, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்

The post திமுக மாணவர் அணி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் 29ம் தேதி கோவையில் நடைபெறும் appeared first on Dinakaran.

Tags : DMK student ,Coimbatore ,Chennai ,DMK Student union ,CVMP Ezhilarasan ,MLA ,DMK ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்