×

கார் டயர் வெடித்து அரசு பஸ் மீது மோதிய விபத்தில் பெண் பலி 3 பேர் படுகாயம் சேத்துப்பட்டில் பரபரப்பு

சேத்துப்பட்டு, ஜன.23: சேத்துப்பட்டு- போளூர் சாலையில் செல்லும் போது கார் டயர் வெடித்து அரசு மீது மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலசபாக்கம் அடுத்த அலங்காரமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமிகண்ணு. இவருடைய மனைவி விஜயலட்சுமி(43). இவர் கடந்த 5 நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று மீண்டும் வீடு திரும்பினர். அப்போது மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இவருடன் தனது மகள் வித்யா(23), அவரது தாய் மல்லிகா(60) ஆகியோரும், பாடகம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் பாலாஜி(23) என்பவரின் காரில் வீடு திரும்பினர். காரை பாலாஜி ஓட்டினார்.

அப்போது சேத்துப்பட்டு- போளூர் சாலையில் செல்லும்போது எதிர் பாராதவிதமாக காரின் முன்பக்க டயர் வெடித்து போளூரில் இருந்து சென்னையை நோக்கி வந்த அரசு பஸ் மீது பயங்கர சத்தத்துடன் மோதி நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இவர்களை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி மல்லிகா பரிதாபமாக பலியானார். டிரைவர் பாலாஜி மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும், விஜயலட்சுமி, வித்யா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார் டயர் வெடித்து அரசு பஸ் மீது மோதிய விபத்தில் பெண் பலி 3 பேர் படுகாயம் சேத்துப்பட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chetupatta ,Chetupat-Bolur road ,Kalasapakkam ,Akuranamangalam ,Padukayam sethupat ,
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்