×

எட்டயபுரத்தில் ₹1.84 கோடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்

எட்டயபுரம், ஜன. 23: எட்டயபுரத்தில் ₹1.84 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. மார்கண்டேயன் எம்எல்ஏ புதிய கட்டிடப் பணியை துவக்கி வைத்தார். சார்பதிவாளர் (பொறுப்பு) பகவதிசெல்வி, அலுவலக உதவியாளர் விக்னேஷ், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன், திமுக எட்டயபுரம் நகர செயலாளர் பாரதிகணேசன், பாரதி மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார், மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன். மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் இமானுவேல், வார்டு செயலாளர்கள் பிச்சை, அருள்சுந்தர், மகளிரணி முருகலட்சுமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post எட்டயபுரத்தில் ₹1.84 கோடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் appeared first on Dinakaran.

Tags : Sub-Registrar Office ,Ettayapuram ,Bhoomipuja ,Markandeyan ,MLA ,Bhagavathyselvi ,Vignesh ,Ettayapuram Municipality ,
× RELATED எட்டயபுரம் அருகே நீர்வரத்து ஓடை,...