×

இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி, ஜன.23: காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டி, மாட்டுவாயன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி ராணி (34). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டு ஆகிறது. குழந்தைகள் இல்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் குப்பன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் ராணிக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் ஆகவில்லை. இதனால் விரக்தி அடைந்த ராணி கடந்த 20ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், கெலமங்கலம் அருகே, கம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் உமா (17). இவர் கடந்த 2 வருடங்களாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். பலஇடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று முன்தினம் உமாக்கு வயிற்று வலி ஏற்பட்டநிலையில், வலி தாங்க முடியாமல், விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி உமா இறந்தார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Kuppan ,Mattuvayankottai, Kundalapatti ,Kaveripatnam ,Rani ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு