×

குருந்தன்கோடு அருகே பைனான்ஸ் நிறுவன மேலாளர் ரயில் மோதி பலி குடும்பத்தினர் கதறல்

நாகர்கோவில், ஜன.23: குமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள ஆசாரிவிளை பகுதியை சேர்ந்தவர் டெல்பின் கில்டஸ் (46). இவர் நேற்று காலை தனது வீட்டு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ெடல்பின் கில்டஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டெல்பின் கில்டஸ் காலையில் எழுந்து வெளியே சென்றதாகவும், தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது ரயில் மோதி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.இது குறித்து ரயில்வே இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால், எஸ்.ஐ. சோம சேகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த டெல்பின் கில்டசுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post குருந்தன்கோடு அருகே பைனான்ஸ் நிறுவன மேலாளர் ரயில் மோதி பலி குடும்பத்தினர் கதறல் appeared first on Dinakaran.

Tags : Kuruthankot ,Nagercoil ,Delphine Kiltus ,Asarivilai ,Kumari district ,Kurundankodu ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது