×

நடுக்கடலில் மீனவர் மாயம்

நித்திரவிளை, ஜன.23: நித்திரவிளை அருகே சின்னத்துறை பகுதியை சேர்ந்தவர் யூஜின். இவருக்கு சொந்தமான விசைப்படகில் தமிழக மற்றும் கேரள பகுதியை சார்ந்த 11 பேர் கடந்த 14ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு கரைக்கு வந்து கொண்டிருந்த போது, 35 கடல் மைல் தொலைவில் வைத்து தேங்காப்பட்டிணம் பகுதியை சேர்ந்த ஜலால் (40) என்பவர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். சம்பவத்தை பார்த்த சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியும் ஜலாலை மீட்க முடியவில்லை. மீன்பிடி தொழிலாளி மாயமானது குறித்து தமிழக மீன்வளத்துறைக்கு படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

The post நடுக்கடலில் மீனவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Nithravilai ,Eugene ,Chinnathurai ,Tamil Nadu ,Kerala ,
× RELATED கன்னியாகுமரி மீனவர் குஜராத் கடலில் மாயம்