×

டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி

சாத்தூர்: சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேஸ்வரன். இவரது குழந்தைகள் திகன்யாஸ்ரீ (4), தியாஸ்ரீ (3). மூத்த குழந்தை திகன்யாஸ்ரீ சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால் பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கும் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தியாஸ்ரீக்கு காய்ச்சல் அதிகமாகவே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று தியாஸ்ரீ உயிரிழந்தார்.

The post டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Chathur ,Sundareswaran ,Metamalai ,Tiganyasri ,Diyasri ,UKG ,Tiganyasree Chathur ,
× RELATED சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து