×

மும்பை சர்வதேச மாரத்தான் போட்டியில் 2 பேர் பலி: 22 பேர் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: மும்பையில் சர்வதேச மாரத்தான் ஓட்டம் நேற்று முன் தினம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். கோரேகாவ் பகுதியை சேர்ந்த ராஜேந்திர போரா(74) என்பவர் முதியவர்கள் பிரிவுக்கான மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டார். மெரைன் டிரைவ் அருகே போரா வந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆம்புலன்சில் கொண்டு செல்லும் போதே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறினார்.

மாரத்தானில் கலந்து கொண்ட கொல்கத்தாவை சேர்ந்த சுவ்ரதீப் பானர்ஜி(40) என்பவர் சாலையில் மயங்கி விழுந்தார். கீழே விழுந்தபோது அவரது தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர். மேலும், ஓட்டத்தில் கலந்து கொண்ட 22 பேர் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 19 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

The post மும்பை சர்வதேச மாரத்தான் போட்டியில் 2 பேர் பலி: 22 பேர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Mumbai International Marathon: ,Mumbai ,international marathon ,Rajendra Bora ,Goregaon ,Marine Drive ,Mumbai International Marathon ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!