×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16வது முறையாக நீட்டிப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 16வது முறையாக நீட்டித்தது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29 வரை நீதிபதி எஸ்.அல்லி நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக, ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதேபோல் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு 3-வது முறையாக மனுதாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14ல் கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தபட்டார். இதனையடுத்து ஜனவரி 29 வரை அவரது காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16வது முறையாக நீட்டிப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Madras Principal Sessions Court ,Chennai ,Chennai Principal Sessions Court ,Minister Senthil Balaji ,Justice ,S. Alli ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...