×

நிலக்கோட்டை அருகே விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டு

நிலக்கோட்டை, ஜன. 22: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த பள்ளபட்டி அருகே மதுரை சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் டூவீலரில் எதிர் எதிரே வந்த இளைஞர் இருவர் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் படுகாயமடைந்தனர். படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை அக்கம்பக்கத்தினர் உடனடியாக 108-ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு முன் அவ்வழியாக வந்த அம்மைநாயக்கனூர் நெடுஞ்சாலை ரோந்து பணி காவலர்கள் விஜய் மற்றும் கங்காதரன் உடனடியாக அடிபட்டவர்களை நெடுஞ்சாலை ரோந்து வாகனத்திலயே ஏற்றிச் கொண்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனால் அதிக அளவு ரத்தம் வெளியேறும் முன் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் இருவரும் காப்பாற்றப்பட்டனர். எனவே சாலை விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபர்களை 108-ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் மனிதாபிமானத்துடன் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து இரண்டு இளைஞர்களின் உயிரைக் காப்பாற்றிய காவலர்களையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

The post நிலக்கோட்டை அருகே விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Dindigul district ,Pallapatti ,Madurai Road ,
× RELATED காவல் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த குற்ற வழக்கு வாகனங்கள்