×

பண்ருட்டி அருகே விபத்தில் பிளஸ் 2 மாணவி பலி

 

பண்ருட்டி, ஜன. 22: பைக் மீது புல்டோசர் வாகனம் மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  பண்ருட்டியை அடுத்த சின்னபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மோகன்(42). இவர் தற்போது சேத்தியாத்தோப்பில் வசித்து வருகிறார். நேற்று சேத்தியாத்தோப்பில் இருந்து பைக்கில் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் பண்ருட்டி வழியாக விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பணிக்கன்குப்பம் கெடிலம் ஆற்று பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த புல்டோசர் வாகனம் இவர்கள் வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த மோகன், பைக்கில் அமர்ந்து வந்த அவரது மனைவி கஸ்தூரி(33), மகள்கள் சந்தியா(17), சவுமியா(13) ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிளஸ் 2 மாணவி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பண்ருட்டி அருகே விபத்தில் பிளஸ் 2 மாணவி பலி appeared first on Dinakaran.

Tags : Panruti ,Mohan ,Chinnapet village ,Chetiathop ,
× RELATED ஒரே சேலையில் தூக்குப்போட்டு கணவன், மனைவி தற்கொலை