×

பெண்களுக்கு இலவச பயணம் உள்ள நிலையில் பேருந்தில் டிக்கெட் வாங்க சொல்லி பெண் காவலரிடம் நடத்துனர் ரகளை: காவல் நிலையத்தில் புகார்

 

பெரம்பூர், ஜன.22: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (27). இவர், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை அயனாவரம் பகுதிக்குச் சென்ற இவர், மீண்டும் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். இதற்காக, தடம் எண்.46 ஜி என்ற சாதாரண கட்டண மாநகர பேருந்தில் ஏறி பயணம் செய்தார். அப்போது பேருந்து நடத்துனர் விஜயகுமார் என்பவர், பாத்திமாவிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.

மற்ற பெண்களுக்கு பேருந்தில் இலவச டிக்கெட் வழங்கிய நடத்துனர், பாத்திமாவிடம் மட்டும் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது பாத்திமா தனது போலீஸ் ஐடி கார்டை காண்பித்துள்ளார். மேலும் இது பெண்களுக்கான பேருந்துதானே, கட்டணம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நடத்துனர் விஜயகுமார், பாத்திமாவை தரக்குறைவாக பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாத்திமா, இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

The post பெண்களுக்கு இலவச பயணம் உள்ள நிலையில் பேருந்தில் டிக்கெட் வாங்க சொல்லி பெண் காவலரிடம் நடத்துனர் ரகளை: காவல் நிலையத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Fatima ,Vyasarpadi ,MKP Nagar Police Station ,Ayanavaram ,Dinakaran ,
× RELATED வாலிபருக்கு கத்திக்குத்து