×

ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் குண்டுவீச்சில் 13 பேர் பலி

கீவ்: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் இரண்டாவது ஆண்டை நெருங்க உள்ள நிலையில் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டெக்ஸ்ட்டில்ஷிக் என்ற இடத்தில் உள்ள சந்தையில் நேற்று உக்ரைன் ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் 13 பேர் கொல்லப்பட்டனர் என ரஷ்யாவால் நியமிக்கப்பட்டுள்ள பிராந்திய அதிகாரி டெனிஸ் புஷ்லின் தெரிவித்தார்.சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் குண்டுவீச்சு தாக்குதல் குறித்து உக்ரைன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ரஷ்யாவின் இந்த தகவலை உடனே உறுதிப்படுத்தவும் முடியவில்லை.மேலும் ரஷ்யாவின் உஸ்ட் லுகா துறைமுகத்தில் உள்ள ரசாயன பொருட்கள் இறக்குமிடத்தில் நேற்று பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

The post ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் குண்டுவீச்சில் 13 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russia ,Kiev ,army ,Textilshik ,Donetsk ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...