×

இலங்கை சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் 40 பேர் விடுவிப்பு

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடலில் சமீபத்தில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 40 பேர் விசாரணை கைதிகளாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளிட்ட 3 சிறைகளில் இருக்கும் மீனவர்களை இம்மாதம் 26 மற்றும் 29, 30ம் தேதி வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன. அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில், 40 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டது.

அதன்படி, வழக்குகளை முடித்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளுக்கு இலங்கை அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து நீதிமன்ற பதிவாளர்கள் மூலம் நீதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் இன்று சிறையில் உள்ள 40 தமிழக மீனவர்களும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கை சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் 40 பேர் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Rameswaram ,Pak Strait ,Jaffna ,Vavuniya ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...