×

75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்

மீனம்பாக்கம்: இந்தியாவின் 75வது குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீர்க்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தின் அனைத்து வளாகங்களிலும் கூடுதல் பாதுகாப்பாக நேற்று நள்ளிரவு 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது, வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடெங்கிலும் வரும் 26ம் தேதியன்று இந்தியாவின் 75வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க, தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக ஒன்றிய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் விமான நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட், வழிபாட்டு தலங்கள் உள்பட பல்வேறு இடங்களில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது.

இதையடுத்து, சென்னை விமானநிலையத்தின் சர்வதேச விமான முனையம், உள்நாட்டு விமான முனையம், பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள சரக்ககப் பிரிவு உள்பட அனைத்து இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த 5 அடுக்கு பாதுகாப்பு முறை வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். மேலும், வரும் 24, 25, 26 ஆகிய 3 நாட்களில் உச்சக்கட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமலுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்துக்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, சந்தேகப்படும் வாகனங்களில் மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு படையினா் சோதனையிட்டு வருகின்றனா். அதேபோல் விமானநிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணா்கள், மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா். விமானநிலைய வளாகத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசாா் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு கண்காணிக்கின்றனர். மேலும், விமானநிலைய மல்டிலெவல் காா் பாா்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் காா்கள், பைக்குகள் போன்ற வாகனங்களை வெடிகுண்டு நிபுணா்கள் தீவிரமாக சோதனையிட்டு விசாரிக்கின்றனா்.

அதேபோல், சென்னை விமானநிலையத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனைய வளாகம், ஓடுபாதை, விமானங்கள் நிறுத்தும் பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையிட்டு கண்காணித்து வருகின்றனர். சென்னை விமானநிலைய வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பார்வையாளர்களுக்கான வருகை தடை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. அதை, மேலும் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் விஐபி பாஸ்கள் வழங்குவதிலும் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் ஏற்கெனவே இயங்கி வரும் சிசிடிவி காமிராக்களுடன் கூடுதலாக அமைத்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.அதேபோல் விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பயணிகளுக்கு வழக்கமான சோதனைகளுடன் மேலும் ஒருமுறை விமானங்களுக்குள் உள்ளே செல்லும் இடத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக, பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகளை துருவித் துருவி சோதிக்கப்படுகிறது.

மேலும் அவர்கள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்றவற்றை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.விமானங்களில் பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, அனைத்து பார்சல்களும் பலகட்ட சோதனைக்கு பிறகே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கப்படுகிறது. விமானத்தில் பயணம் மேற்கொள்வதற்கு முன் உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவும், பன்னாட்டு பயணிகள் மூன்றரை மணி நேரத்துக்கு முன்னதாக சென்னை விமானநிலையத்துக்க வரவேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சென்னை விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல் appeared first on Dinakaran.

Tags : 75th Republic Day ceremony ,Chennai Airport ,India ,75th Republic Day ,
× RELATED ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன...