×

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்என என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Meteorological Survey ,Center ,Chennai ,Tamil Nadu ,Chennai Meteorological Centre ,Ramanathapuram ,Sivaganga ,Madurai ,Pudukkottai ,Thanjai ,Thiruvarur ,Nagai ,Meteorological Survey Center ,
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு...