×

பைக் மோதியதில் ஆசிரியை படுகாயம்

விருதுநகர், ஜன. 21: விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை செந்தாமரை(45) இவர் கே.செவல்பட்டியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை நான்குவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த பாலசங்கர்(24) என்பவர் வேகமாக பைக்கை ஓட்டி வந்து செந்தாமரை மீது மோதி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த செந்தாமரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து செந்தாமரை சூலக்கரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பைக் மோதியதில் ஆசிரியை படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Sentamarai ,Virudhunagar Municipal Girls High School ,K. Sewalpatti ,Balashankar ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...