- சக்கர
- ராஜபாளையம்
- விருதுநகர் மாவட்ட மாநாடு
- Thiruvilliputhur
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக விவசாயிகள்
- ராஜபாளையம் மேற்கு சோக்கநாதன்புத்தூர், விருதுநகர் மாவட்டம்
- தின மலர்
ராஜபாளையம், ஜன. 21: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு சொக்கநாதன்புத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் 27, 28 தேதியில் விருதுநகர் மாவட்ட மாநாடு திருவில்லிபுத்தூரில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை விளக்கி டூவீலர் வாகன பிரச்சார இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் அய்யணன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் பகத்சிங், சுப்பிரமணி உள்ளிட்டோர் முன்னிலையில் கலந்து கொன்டு தேவதானம் காமராஜர் நகர், சேத்தூர் மேட்டுபட்டி, முத்துச்சாமிபுரம், முகவூர், செட்டியார்பட்டி வழியாக பிரசாரம் செய்தனர். மேலும் காட்டு பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
The post ராஜபாளையத்தில் டூவீலர் பிரசாரம் appeared first on Dinakaran.