×

தொழிலாளி தற்கொலை

போடி, ஜன. 21: போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சித்திக் முகமது (34). கூலி தொழிலாளி. மதுப்பழக்கம் உள்ள இவர், வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியுடன் அடிக்கடி பிரச்னையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டின் வெளியே வரண்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை முகமது அப்பாஸ், போடி தாலூகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Bodi ,Sithik Mohammed ,Meenakshipuram Ambedkar Street ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...