×

நாய்களை கொன்ற 2 பேர் மீது வழக்கு

பேரையூர், ஜன. 21: பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் மனைவி சகுந்தலா (65). இவர் தனது தோட்டத்தில் பாதுகாப்பிற்காக 5 நாய்கள் வளர்த்து வந்தார். இந்நிலையில் தோட்டத்தில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் தடவிய உணவைத்தின்று 5 நாய்களும் இறந்து கிடந்தன. இது குறித்து சகுந்தலா இதே ஊரைச் சேர்ந்த ராமர் மற்றும் ராஜா ஆகியோர், தனது நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளதாக சாப்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரிலர் அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post நாய்களை கொன்ற 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Beraiyur ,Shakuntala ,Jayaraj ,Amankaraipatti ,
× RELATED மனைவியுடன் தகாத உறவு வாலிபருக்கு கத்திவெட்டு