- தியாகராஜா ஆராதன விழா
- Thiruvaiyar
- தஞ்சாவூர்
- மாவட்ட கலெக்டர்
- தீபக் ஜேக்கப்
- 177 வது ஆராதன விழா
- சத்குரு தியாகராஜா பரபிரம்ம
- Tiruvaiyar
- தியாகராஜர் ஆராதன திருவிழா
- திருவையார்
தஞ்சாவூர்,ஜன.21: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸத்குரு தியாகராஜ பரபிரம்மத்தின் 177வது ஆராதனை விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு தியாகராஜர் பரபிரம்மத்தின் 177வது ஆராதனை விழா வருகின்ற 26ம்தேதி முதல் 30ம்தேதி வரை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு துறை போன்ற பல்வேறு துறைகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், வட்டாட்சியர் தர்மராஜ், துணை காவல் கண்காணிப்பாளர் ராமதாஸ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராம் பிரபு, தியாக பிரம்ம சபை உதவி செயலாளர் ரவிச்சந்திரன், காவேரி பிரிவு நீர்வளத்துறை உதவி பொறியாளர் அன்புச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா முன்னேற்பாடு appeared first on Dinakaran.